என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பாதுகாப்பு இல்லம்"
- சென்னையில் பிடிபட்டனர்
- பார்ஸ்டல் சிறைக்கு மாற்றுவது குறித்து ஆலோசனை
வேலூர்:
வேலூர் காகிதப்ப ட்டறையில் சமூக பாதுகாப்பு துறையின் கீழ் அரசினர் பாதுகாப்பு இல்லம் செயல்படுகிறது. பல வகையான குற்றச்செயல்களில் ஈடுபட்டு தண்டனை வரும் சிறுவர்கள் 42 பேர் இங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதில் ஏ பிளாக்கில் 28 பேரும் பிளாக்கில் 12 பேர் உள்ளனர்.
இவர்களில் 6 பேர் காவலர்களை தாக்கிவிட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு தப்பி சென்று விட்டனர். அவர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு தப்பிச் சென்றது தெரியவந்தது.
இது தொடர்பாக வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இவர்கள், சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
வேலூர், காட்பாடியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதன் மூலம் காட்பாடி ரெயில் நிலையத்திற்கு சென்ற அவர்கள் அங்கிருந்து சென்னை சென்ற ரெயிலில் தப்பி சென்றது தெரிய வந்தது. மேலும் சிறுவர்களின் சொந்த ஊர்களிலும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையில் ஒரு சிறுவனை போலீசார் மடக்கி பிடித்தனர். மேலும் 5 பேரை தேடி வந்தனர்.
சென்னை மணலி மற்றும் கோயம்பேடு பகுதியில் சிறுவர்கள் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் நேற்று இரவு தனிப்படை போலீசார் அங்கு அதிரடி வேட்டை நடத்தினர்.அப்போது கோயம்பேட்டில் பதுங்கி இருந்த ஒரு சிறுவன் மற்றும் மணலியில் பதுங்கி இருந்த 4 சிறுவர்கள் போலீசாரிடம் சிக்கினர். அவர்களை வேலூருக்கு அழைத்து வர ஏற்பாடு செய்துள்ளனர்.
அதேபோல், பாதுகாப்பு இல்லத்தின் 'ஏ' பிளாக்கில் உள்ள பொருட்களை உடைத்து ரகளையில் ஈடுபட்டதாக 12 பேர் மீது வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய 12 பேரும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்று தெரியவந்தது. இவர்கள் 12 பேரையும் பார்ஸ்டல் சிறைக்கு மாற்றுவது குறித்து ஆலோசித்து வருகின்றனர்.
- சிறுவர்களின் சொந்த ஊர்களிலும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
- பாதுகாப்பு இல்லத்தின் ’ஏ’ பிளாக்கில் உள்ள பொருட்களை உடைத்து ரகளையில் ஈடுபட்டதாக 12 பேர் மீது வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
வேலூர்:
வேலூர் காகிதப்பட்டறையில் சமூக பாதுகாப்பு துறையின் கீழ் அரசினர் பாதுகாப்பு இல்லம் செயல்படுகிறது. பல வகையான குற்றச்செயல்களில் ஈடுபட்டு தண்டனை வரும் சிறுவர்கள் 42 பேர் இங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதில் ஏ பிளாக்கில் 28 பேரும் பிளாக்கில் 12 பேர் உள்ளனர்.
இவர்களில் 6 பேர் காவலர்களை தாக்கிவிட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு தப்பி சென்றுவிட்டனர். அவர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு தப்பிச் சென்றது தெரியவந்தது.
இது தொடர்பாக வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இவர்கள், சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
வேலூர், காட்பாடியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதன் மூலம் காட்பாடி ரெயில் நிலையத்திற்கு சென்ற அவர்கள் அங்கிருந்து சென்னை சென்ற ரெயிலில் தப்பி சென்றது தெரிய வந்தது. மேலும் சிறுவர்களின் சொந்த ஊர்களிலும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையில் ஒரு சிறுவனை போலீசார் மடக்கி பிடித்தனர். மேலும் 5 பேரை தேடி வந்தனர்.
சென்னை மணலி மற்றும் கோயம்பேடு பகுதியில் சிறுவர்கள் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் நேற்று இரவு தனிப்படை போலீசார் அங்கு அதிரடி வேட்டை நடத்தினர். அப்போது கோயம்பேட்டில் பதுங்கி இருந்த ஒரு சிறுவன் மற்றும் மணலியில் பதுங்கி இருந்த 4 சிறுவர்கள் போலீசாரிடம் சிக்கினர். அவர்களை வேலூருக்கு அழைத்து வர ஏற்பாடு செய்துள்ளனர்.
அதேபோல், பாதுகாப்பு இல்லத்தின் 'ஏ' பிளாக்கில் உள்ள பொருட்களை உடைத்து ரகளையில் ஈடுபட்டதாக 12 பேர் மீது வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய 12 பேரும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்று தெரியவந்தது. இவர்கள் 12 பேரையும் பார்ஸ்டல் சிறைக்கு மாற்றுவது குறித்து ஆலோசித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்